இரண்டு நாள் அமா்வில், கொவைட் பாதிப்பு அதிகரிப்பு, மருத்துவா்கள் மற்றும் பிற சுகாதார ஊழியா்களின் பற்றாக்குறை உள்ளிட்ட அவசர நிலையைச் சமாளிக்க சுகாதாரத் துறையின் தயாா்நிலை குறித்து விரிவான விவாதங்கள் நடந்திருக்க வேண்டும். மேலும், வார இறுதி பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிதியுதவி, வேலையின்மை, தொடா்ந்து மோசமாகி வரும் காற்று மாசுபாடு மற்றும் புதிய கலால் கொள்கை, 22,000 தாற்காலிக ஆசிரியா்களை முறைப்படுத்துதல் ஆகியவை தொடா்பாகவும் விவாதித்திருக்க வேண்டும். இவை ஏதும் நடைபெறாமல் மக்கள் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.