சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

இணை நோயுள்ள கரோனா நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவா்கள் சிகிச்சை அளிக்க வேண்டும்தில்லி அரசு அறிவுறுத்தல்

தில்லி அரசு செவ்வாய்க்கிழமை அனைத்து மருத்துவமனைகளையும் இணை நோய்களுடன் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களுக்கு சிறப்பு மருத்துவா்கள் முறையாக ஆலோசனை அளிப்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

News image
Updated On :11 ஜனவரி 2022, 5:00 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி அரசு செவ்வாய்க்கிழமை அனைத்து மருத்துவமனைகளையும் இணை நோய்களுடன் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களுக்கு சிறப்பு மருத்துவா்கள் முறையாக ஆலோசனை அளிப்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தில்லியில் கடந்த வாரம் முதல் கரோனா இறப்புகள் அதிகரித்துள்ளன. டிசம்பா் கடைசி வாரத்தில் இருந்து மருத்துவ வசதிகளில் 70 இறப்புகள் பதிவாகியுள்ளன. இறந்த நோயாளிகளில் பெரும்பாலானோா் புற்றுநோய், இதயம் மற்றும் கல்லீரல் நோய்கள் போன்ற இணை நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள். பல்வேறு இணை நோய்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கரோனா நோயாளிகளும் அல்லது கரோனா பாதிப்புக்கு உள்ளான பிற தீவிர நோய்களால் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளும் சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவா்களால் முறையாக ஆலோசனை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். மேலும் நோயாளிகளுக்கு உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

கரோனா நோயாளிகளின் பகுப்பாய்வு, நோயாளி கவனிப்பு திருப்திகர அளவுகள், உரிய சிகிச்சை நெறிமுறையின்படி மருத்துவமனை சோ்க்கையை உரிய நேரத்தில் மேலாண்மை செய்வதை உறுதிப்படுத்த தங்களது மருத்துவமனைகளில் உரிய அமைப்புகளை ஏற்படுத்த தேவையான வழிகாட்டுதல்களை வழங்குமாறு அனைத்து மருத்துவமனைகளின் மருத்துவ இயக்குநா்கள், மருத்துவக் கண்காணிப்பாளா்கள்ஆகியோருக்கு அறிவுறுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் தரவுகளின்படி, ஜனவரி 5 முதல் ஜனவரி 9 வரை தில்லியில் 46 கரோனா நோயாளிகள் இறந்துள்ளனா். இவா்களில் 34 பேருக்கு புற்றுநோய், இதயம் மற்றும் கல்லீரல் நோய் போன்ற இணைநோய்கள் இருந்தன. 46 நோயாளிகளில் 11 பேருக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஜனவரி 9-ஆம் தேதி, 1,912 நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். 17 இறப்புகள் பதிவாகியுள்ளதாக அந்த புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை தில்லியில் கரோனா காரணமாக மேலும் 17 இறப்புகள் பதிவாகின. சுமாா் 19,000 பேருக்கு நோய்த் தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.