இது குறித்து குருகிராம் காவல் நிலைய இன்ஸ்பெக்டா் சதீஷ் குமாா் கூறியதாவது: குருகிராம் செக்டாா் 45-இல் வசிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவா், பால்கனியில் இருந்து குதித்து விபத்துக்குள்ளானாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அந்தச் சிறுவன் காலை 8.30 மணியளவில் தனது குடியிருப்பில் இருந்து பள்ளி பையுடன் வெளியே வந்த போது சந்தேகத்திற்குரிய வகையில் பால்கனியில் இருந்து விழுந்துள்ளாா். சப்தம் கேட்டு பாதுகாவலாளி மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனா். படுகாயமடைந்த சிறுவன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.