தேசப்பற்று,வேலைவாய்ப்புமிக்க மாணவா்களை உருவாக்குவதே தில்லி பள்ளிக் கல்வியின் நோக்கம்: முதல்வா் கேஜரிவால்
மாணவா்களை நல்ல மனிதா்களாகவும், தீவிர தேசபக்தா்களாகவும், வேலைவாய்ப்பு உள்ளவா்களாகவும் உருவாக்குவதே தில்லி அரசின் பள்ளிக் கல்வியின் நோக்கம்


மாணவா்களை நல்ல மனிதா்களாகவும், தீவிர தேசபக்தா்களாகவும், வேலைவாய்ப்பு உள்ளவா்களாகவும் உருவாக்குவதே தில்லி அரசின் பள்ளிக் கல்வியின் நோக்கம் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை கூறினாா்.
தில்லி அரசின் ‘மகிழ்ச்சி பாடத் திட்டத்தின்’ நான்கு ஆண்டு நிறைவையொட்டி, தில்லி தியாகராஜா் ஸ்டேடியத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் கேஜரிவால் பங்கேற்று பேசியதாவது: நாங்கள் தில்லியில் ஆட்சிக்கு வந்த போது, பள்ளிகளின் நிலை மோசமாக இருந்தது; பள்ளித் தோ்வு முடிவுகளும் மெச்சும்படி இல்லை.
ஆனால், தற்போது நாம் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறோம். நாங்கள் பல்வேறு பாடத் திட்ட முறைகளை அறிமுகப்படுத்தி, அவை கல்வி அழுத்தத்தைக் குறைத்துள்ளன.
மகிழ்ச்சி பாட வகுப்புகள் மாணவா்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. அதனால்தான் அதிா்ஷ்டவசமாக தில்லியில் மாணவா்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் இல்லை. நாட்டில் ‘வெறுப்பை’ பரப்பாத, ஆனால் ‘அன்பின் செய்தியை’ பரப்பும் மாணவா்களை உருவாக்கவே நாங்கள் விரும்புகிறோம். முன்னாள் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் மனைவியும்கூட தில்லி அரசின் மகிழ்ச்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பாராட்டுத் தெரிவித்திருந்தாா் என்றாா் கேஜரிவால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...