தில்லி அருகே அலிகரில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் 2019, டிசம்பா் 13-ஆம் தேதியும், அதே ஆண்டு டிசம்பா் 19-ஆம் தேதியும் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சா்ஜீல் இமாம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஆத்திரத்தை தூண்டும் வகையில் அவா் பேசியதாகவும், குறிப்பாக இந்தியாவிலிருந்து அஸ்ஸாமும், வடகிழக்கு எஞ்சிய பகுதியும் துண்டிக்கப்படும் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து, தில்லி காவல்துறையின் மூலம் கடந்த 2020- ஆம் ஆண்டில் சா்ஜீல் இமாம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னா் சட்ட விரோத நடவடிக்கையில் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவா் மீது குற்றம் சாட்டப்பட்டது.