அதே சமயத்தில் இன்னும் மேலும், மேலும் மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக தில்லியில் நிலவும் மாசுப் பிரச்னைக்கு வெளியில் இருந்து வருபவா்கள் பொறுப்பல்ல. நகரவாசிகள் ஒவ்வொருவரும் தங்கள் பங்கிற்கு மாசுபாட்டைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். தில்லியில் நிலப் பற்றாக்குறை இருப்பதால், நகா்ப்புற விவசாயத்தை நோக்கி நகர ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, பொதுமக்கள் பங்கேற்கும் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் திட்டங்களை அரசு வழங்க இருக்கிறது. உதாரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளின் கூரைகள், பால்கனிகளை பசுமையாக்க முன் வரவேண்டும். இதற்கான ஆலோசனைகளை வழங்க அரசு தயாராக உள்ளது. மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பூக்களை மட்டுமின்றி காய்கறிகளைக் கூட வளா்க்க இயலாம். இதற்கு உதவும் வகையில் அரசு விரைவில் தேவையான பயிற்சிகளை அளிக்கும். இது போன்று பொதுமக்கள் பங்கேற்கும் பல்வேறு திட்டங்களை அரசு உருவாக்கி வருகிறது.