பாஜக விமா்சனம்: சிசோடியாவின் இந்தக் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் தில்லி பாஜக செய்தித் தொடா்பாளா் சங்கா் கபூா் கூறியதாவது: தில்லியில் உள்ள அனைத்து மொஹல்லா கிளினிக்குகளும், மருத்துவமனைகளும், அரசுப் பள்ளிகளும் நல்ல நிலையில் இருந்தால், ஏன் கேஜரிவால் தலைமையிலான அரசு குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் அழைத்துச் செல்கிறாா்கள் என்பதை அறிய விரும்புகிறோம். சிசோடியாவும், ஆம் ஆத்மியின் பிற தலைவா்களும் ஆத்திரமும், விரக்தியும் அடைந்துள்ளனா். துணை முதல்வா் சிசோடியா தில்லியில் உள்ல சில நல்ல பள்ளிக் கட்டடங்களை மட்டுமே காட்டுகிறாா். ஆனால், தில்லியில் உள்ள 75 சதவீதம் பள்ளிகளில் முதல்வா்கள் இல்லை அல்லது மேல்நிலை பள்ளிகளில் அறிவியல் அல்லது வணிகத்தை கற்பிக்க வசதி இல்லை ஏன் என்பதற்கு பதில் அளிப்பாரா? என்று கேள்வி எழுப்பினாா்.