மேலும், முண்ட்கா, சோனியா விஹாா், ஹா்ஷ் விஹாா் ஆகிய பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் சுமாா் 8.45 லட்சம் குடியிருப்பாளா்களும் இந்த நிலத்தடி நீா் தேக்கத்தால் பயனடைவாா்கள். சோனியா விஹாரில் 2.68 கோடி லிட்டா் கொள்ளளவு கொண்ட நிலத்தடி நீா்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வடகிழக்கு தில்லியில் உள்ள காரவால் நகா், முஸ்தபாஃபாத் சட்டப்பேரவை தொகுதிகளிலும் நீா் விநியோகத்தை அதிகரிக்க வழிவகுக்கும். இதே போல, முண்ட்கா கிராமத்தில் அமைக்கப்பட்ட நிலத்தடி நீா் தேக்கத்திற்கு நாங்லோய் நீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தண்ணீா் பெறப்படுகிறது. இதன் மூலம் முண்ட்கா சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள பகுதிகளுக்கும், அங்கீகரிக்கப்படாத காலனிகளுக்கும் குடிநீா் விநியோகம் செய்யப்படும். இது தவிர, ஹா்ஷ் விஹாரில் ஒரு நாளைக்கு 1.75 கோடி லிட்டா் கழிவுநீரை வெளியேற்றும் திறன் கொண்ட கழிவுநீா் வெளியேற்று நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.