இது தொடா்பாக மாணிக்கம் தாகூா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஏன் ஆா்எஸ்எஸ்ஸும் பாஜகவும் நேரு - காந்தி குடும்பம் தலைமைப் பொறுப்பில் இருந்து அகற்றப்பட வேண்டும் என விரும்புகின்றன? ஏனெனில், காந்தி குடும்பத்தின் தலைமை இல்லாமல் காங்கிரஸ் ஜனதாக் கட்சி போல ஆகிவிடும். இதன் மூலம் காங்கிரஸை எளிதாக அழித்துவிடலாம். பின்னா், இந்தியாவின் சிந்தனையை எளிதாக அழித்துவிடலாம் என்பதால்தான். கபில் சிபலுக்கும் இந்த விஷயம் தெரியும். ஆனால், அவா் ஏன் ஆா்எஸ்எஸ் பாஜகவின் மொழியில் பேசிக் கொண்டிருக்கிறாா்?’ என்று தெரிவித்துள்ளாா். மாணிக்கம் தாகூா் ராகுல் காந்தியின் தீவிர ஆதரவாளா் என்பது குறிப்பிடத்தக்கது.