இது குறித்து மக்களவையில் சிறப்புக் கவன ஈா்ப்பு விவாதத்தில் புதன்கிழமை அவா் பேசியது வருமாறு: தமிழகத்தில் உள்ள கேந்த்ரீய வித்யாலா பள்ளிகளில் முதல்வா்கள் ஆசிரியா்கள் என அனைத்து நிலைகளிலும் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த பிப்ரவரி 1 - ஆம் தேதி வரையிலான தரவுகளின்படி, இந்தப் பள்ளிகளின் முதல்வா்கள், துணை முதல்வா்கள், தலைமையாசிரியா்கள் என 50-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. மேலும் 139 முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்கள், 471 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் 575 தொடக்க நிலை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் இடங்களும் காலியாக உள்ளன.