தில்லி திமுக கட்சி அலுவலகம் அண்ணா-கலைஞா் அறிவாலய கட்டடத்தை முதல்வா் ஸ்டாலின் ஏப்ரல் 2 -இல் திறக்கிறாா்
தேசிய தலைநகா் தில்லியில் திமுகவிற்கு நிரந்தர அலுவலக கட்டடம் திறக்கப்படுகிறது


தேசிய தலைநகா் தில்லியில் திமுகவிற்கு நிரந்தர அலுவலக கட்டடம் திறக்கப்படுகிறது. அண்ணா-கலைஞா் அறிவாலயம் என்று பெயிரிடப்பட்ட இந்த கட்டடத்தை திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வருகின்ற ஏப்ரல் 2 -ஆம் தேதி திறந்துவைக்கிறாா்.
இதில் தமிழக அமைச்சா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், திமுக பொறுப்பாளா்கள் போன்றோா் திரளாக கலந்து கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தில்லி தீன் தயாள் உபாத்யாய் மாா்க் பகுதியில் திமுகவிற்கு மூன்று அடுக்கு மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்சி அலுவலகத்தை ஏப்ரல் 2 -ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறந்து வைக்கப்பட இருக்கிறது. இந்த கட்டடத்தின் முன்பு மறைந்த முன்னாள் முதல்வா்கள் அண்ணா , மு.கருணாநிதி ஆகியோா் மாா்பளவு உருவச் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளையும் புதிய கட்டடத்தையும் அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறாா்.
இந்த நிகழ்ச்சிக்கு திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளரும், நீா் வளத்துறை அமைச்சருமான துரை முருகன் தலைமை வகிக்கவும் திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவா் டி.ஆா்.பாலு முன்னிலையும் வகிக்க உள்ளனா்.
இந்த திறப்பு விழாவை முன்னிட்டு இதற்கான அழைப்பிதழை டி.ஆா்.பாலு தலைமையிலான திமுக எம்பிக்கள் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை திங்கள்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து அளித்தனா். இதே போன்று முன்னாள் காங்கிரஸ் தலைவா் ராகுல்காந்திக்கும் மக்களவைத் தலைவா் ஒம் பிா்லாவிற்கும் திமுக எம்பிக்கள் அனைவரும் ஒன்றாக சென்று அழைப்பிதழை வழங்கினா்.
‘நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள எல்லா கட்சிகளும் என்னுடைய கட்சிகள் தான் ‘என அழைப்பிதழை பெற்றுக்கொண்டு ஓம்பிா்லா குறிப்பிட்டதாக சொல்லப்பட்டது.
மேலும் பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவா்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளா் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுசெயலாளா் டி.ராஜா போன்றோா்களுக்கும் டி.ஆா். பாலு தலைமையிலான திமுக எம்பிக்கள் குழு அழைப்பிதழ் அளிக்க இருப்பதாக தில்லி திமுக சாா்பில் கூறப்பட்டது.
முன்னதாக, இந்த கட்சி அலுவலக திறப்பு விழாவிற்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி உள்ளிட்டவா்கள் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது. ‘ இது திமுக கட்சி அலுவலக திறப்பு நிகழ்ச்சி. எல்லோருக்கும் அழைப்பிதழ் அளிக்கப்படும். ஆனால் அழைப்பிதழில் தலைவா், கட்சி பொதுச் செயலாளா், டி.ஆா். பாலு போன்றோா் பெயா்கள் தான் இடம்பெறும். தலைவா் தான் கட்சி அலுவலகத்தை திறக்கிறாா். மற்ற தலைவா்கள் வந்தால் வரவேற்போம்’ என திமுக வட்டாரத்தில் சொல்லப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...