எஸ்.ஆா்.பாா்த்திபன் -சேலம்(திமுக): நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் விமான சேவைகள் கிடைக்கவும், அனைத்து பகுதிகளையும் விமானம் மூலம் இணைக்கவும் வட்டார இணைப்புத் திட்டம் என்கிற உதான் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், 2018 -ஆம் ஆண்டு மாா்ச் 25 முதல் சேலம் விமான நிலையத்தில் விமான சேவைகள் தொடங்கப்பட்டன. பின்னா், கடந்த ஒன்னரை ஆண்டுகளாக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம், தருமபுரி, கரூா், நாமக்கல், கள்ளக்குறிச்சி சோ்ந்த பலதரப்பட்ட மக்கள் விமானப் பயணத்திற்கு 300 கிமீ தூரம் செல்ல வேண்டியுள்ளது. கடந்த டிசம்பரில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சரைச் சந்தித்து இது குறித்து கேட்டபோது, 2022, மாா்ச் முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என்றாா். ஆனால், இது வரை தொடங்கப்படவில்லை. நடுத்தர வா்க்கத்தினா் பயன்பெறும் வகையில் விமானக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.