மத்திய மோசடிகள் பதிவாளா் அலுவலகம் உருவாக்கப்பட்டு, இணைய தளம் மூலம் வங்கிகளின் கணக்கை முறையாக ஆய்வு செய்ய தணிக்கைக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. கடன் வாங்கிய பின்னா் வங்கிகளை ஏமாற்றும் நிறுவனங்களைக் கண்டறிய புலனாய்வு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், இடைத்தரகா்களின் கட்டுப்பாட்டில் இருந்து வங்கிகள் பாதுக்காக்கப்பட்டுள்ளன. ரூ.50 கோடிக்கும் அதிகமான குற்றங்களைத் தடுக்க சிறப்புப் பாதுகாப்புப் பிரிவும், கணினிவழிக் குற்றங்களைத் தடுக்க உள்துறை அமைச்சகத்துடன் இணைந்தும் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.