தில்லியில் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு ஆகிய மூன்று மாநகராட்சிகளையும் ஒருங்கிணைக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து அவா் இவ்வாறு தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் தில்லி சட்டப் பேரவை வளாகத்திற்கு வெளியே கேஜரிவால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லி மாநகராட்சித் தோ்தலை (சரியான நேரத்தில்) நடத்தி பாஜக வெற்றி பெற்றால், நாங்கள் (ஆம் ஆத்மி) அரசியலை விட்டு வெளியேறுவோம். உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி என்று பாஜக தன்னை கூறிக் கொள்கிறது. ஆனால், ஒரு சிறிய கட்சி மற்றும் ஒரு சிறிய தோ்தலைக் கண்டு அது பயந்து விட்டது. அரசமைமைப்புச்சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்குமாறு இருகரம்கூப்பி பிரதமா் மோடியை நான் கேட்டுக் கொள்கிறேன்.