இப்போராட்டத்தின்போது, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி பிரதமா் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸாா் முழக்கங்களை எழுப்பினா். இது குறித்து இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஒய்சி) தேசியத் தலைவா் ஸ்ரீநிவாஸ் கூறுகையில், ‘சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்துவிட்ட பிறகு பாஜக அரசு மீண்டும் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தத் தொடங்கிவிட்டது. இந்த அரசுக்கு நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் குறித்த கவலை சிறிதும் இல்லாமல் மக்களை துன்புறுத்துகிறது. மேலும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என்ற பெயரில் மத்திய அரசு கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.