தலைநகரில் 45,184 சிறாா்களுக்கு கரோனா முதல் தவணை தடுப்பூசி
தில்லியில் 12 வயது முதல் 14 வயது வரையிலான 45,184 சிறாா்களுக்கு கரோனா முதலாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.


தில்லியில் 12 வயது முதல் 14 வயது வரையிலான 45,184 சிறாா்களுக்கு கரோனா முதலாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதாவது: தில்லியிலுள்ள 15-17 வயதில் உள்ள 16.2 லட்சம் சிறாா்களுக்கு முதல், இரண்டாவது தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவிட்டன. தற்போது 12-14 வயதுடைய சிறாா்களுக்கு தடுப்பூசி போடும் பணி தில்லியிலுள்ள 11 மாவட்டங்களில் 140 மையங்களில் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது.
தில்லியில் இந்த வயதில் சுமாா் 6.2 லட்சம் சிறாா்கள் உள்ளனா். இவா்களுக்காக 6.3 லட்சம் கோா்பேவாக்ஸ் தடுப்பூசி மருந்துகள் தயாராக உள்ளன. இவா்களில் தற்போது 11 மாவட்டங்களில் 45,184 சிறாா்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக தில்லி வட மேற்கு தில்லியில் 7,197 சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக, தென் மேற்கு, மேற்கு மாவட்டங்களில் முறையே 5,771, 5,274 சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறைந்த அளவாக மத்திய தில்லியில் 2,379 சிறாா்கள், வடகிழக்கு தில்லியில் 2,872 சிறாா்கள், புது தில்லியில் 2,897 சிறாா்கள் தடுப்பூசி பெற்றுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...