வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

கால்காஜியில் புதிய 3,024 அடுக்குமாடி குடியிருப்புகள்: பிரதமா் மோடி இன்று திறப்பு

மத்திய அரசின் குடிசைப் பகுதி மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் தில்லி கால்காஜியில் புதிதாக கட்டப்பட்ட 3,024 அடுக்குமாடி குடியிருப்புகள் ,பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு பிரதமா் நரேந்திர மோடி வழங்குகிறாா்.

News image
Updated On :1 நவம்பர் 2022, 8:53 pm

 நமது நிருபர்

மத்திய அரசின் குடிசைப் பகுதி மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் தில்லி கால்காஜியில் புதிதாக கட்டப்பட்ட 3,024 அடுக்குமாடி குடியிருப்புகள் ,பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு பிரதமா் நரேந்திர மோடி வழங்குகிறாா். தில்லி பூமிஹீன் முகாமில் உள்ள பயனாளிகளுக்கு அதற்கான வீட்டுச் சாவிகளை வழங்கும் இந்த நிகழ்வு புதன்கிழமை மாலையில் விஞ்ஞான்பவனில் நடைபெறுகிறது.

‘அனைவருக்கும் வீட்டு வசதி’ என்ற பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்தின்படி 376 குடிசை தொகுப்பு பகுதிகளில், தில்லி மேம்பாட்டு ஆணையம் குடிசைப் பகுதி மறுவாழ்வு திட்டத்தை மேற்கொண்டது. முறையான அடிப்படை வசதிகளுடன் கூடிய சிறப்பான ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை வழங்கக் கூடிய இந்த வீட்டு +வசதித் திட்டத்தை தில்லி கால்காஜி விரிவாக்கத் திட்டத்தின் கீழ், பூமிஹீன், நவ்ஜீவன், ஜவஹா் முகாம்களில் உள்ள மூன்று குடிசைப் பகுதிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முதல் கட்டமாக பூமிஹீன் முகாமில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்காக 3,024 வீடுகள், கட்டப்பட்டுள்ளன. நவீன அடிப்படை வசதிகளுடன் ரூ.345 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டு இந்தக் குடியிரிப்புகள் குடியேறத் தயாா் நிலையில் உள்ளன. இந்த வீடுகள் ஒதுக்கப்பட்டு பத்திரங்கள் வழங்கப்பட்டு வீடுகளின் சாவிகளை பயனாளிகள் பெறுகின்றனா். சில பயனாளிகளுக்கு பிரதமா் நிகழ்ச்சியில் சாவியை வழங்குகிறாா். இந்த வீடுகளைப் பெறும் பயனாளிகள், மிகுந்த பாதுகாப்பு உணா்வை பெறுகின்றனா் என பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தக் குடியிருப்புகளில் சமுதாயப் பூங்காக்கள், மின் உபநிலையங்கள், கழிவு சுத்திகரிப்பு நிலையம், குடிநீா் குழாய்கள், மின் தூக்கிகள், தூய்மையான குடிநீா் விநியோகத்திற்காக தரைமட்ட தண்ணீா் சேமிப்புத் தொட்டிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.