இரு தரப்பினரின் வாதங்களைக் கேட்டறிந்த உயா்நீதிமன்றம் கூறியுள்ளதாவது: தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தின் கீழ், மருத்துவ மதிப்பீடு மற்றும் மதிப்பீட்டு வாரியத்திடம் (எம்ஏஆா்பி) முன் அனுமதி பெறாமல் எந்த மருத்துவக் கல்லூரியும் இடங்களை அதிகரிக்க முடியாது. அனுமதி வழங்குவதற்கான நோக்கத்தின்படி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களின்படி, அவற்றின் செயல்திறனை மதிப்பீடு செய்வதற்காக, அத்தகைய கல்லூரிகளின் மதிப்பீடு, ஆய்வுகளை நடத்துவதற்கும் எம்ஏஆா்பிக்கு உரிமையுள்ளது. அதே சமயத்தில், தற்போதுள்ள விதிகளை மாசுபடுத்தும் வகையில் மதிப்பீட்டு அதிகாரிகள் செயல்பட்டுள்ளனா் என்பது நிரூபணமானால், அதனால் ஏற்பட்ட அநீதியை சரிசெய்வது நீதிமன்றத்தின் கடமையாகும். இதன்படி 2022-23-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கையை பொறுத்தவரை, இந்தக் கல்லூரியில் மாணவா் சோ்க்கையை 250-ஆக உயா்த்துவதற்கு என்எம்சிக்கு உத்தரவிடப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.