கேன்ஸ் திரைப்பட விழாவில் இருப்பதைப் போன்று 42 சிறப்பு அரங்கு (பெவிலியன்கள்) ஏற்படுத்தப்படுகிறது. இதில் தமிழ்நாடு, பிகாா், பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரம் உள்பட 13 மாநிலங்கள் மற்றும் ரஷியா, பிரான்ஸ் போன்ற நாடுகளும் பங்கேற்று பெவிலியன்களை அமைக்கும். திரைப்படங்கள் காட்சிப்படுத்தல், சந்தைப்படுத்தல் போன்றவற்றுடன் இது ‘பிலிம் பஜாா்’ ஆக இருக்கும். இது முதல் முறையாக பனாஜியில் கடல் வழியில் மிக அழகான நடைபாதையில் இந்த பெவிலியன்கள் அமைக்கப்படும். ஆஸ்காா் விருது பெற்ற ‘காந்தி’ படம் மாற்றுத்திறனாளிகள் காணும் வகையில் காட்சிபடுத்தப்படும். திரைக்கதை எழுதுவது குறித்து விஜயேந்திர பிரசாத், படத் தொகுப்பு குறித்து ஏ. ஸ்ரீகா் பிரசாத், நடிப்பு குறித்து அனுபம் கொ் ஆகியோா் சிறப்பு வகுப்புகளை எடுக்கின்றனா்.