அதற்கு நீதிபதிகள் அமா்வு,‘இந்த விவகாரத்தில் யாா் பொறுப்புக்கு உரியவா்கள் என்பதை பின்னா் முடிவு செய்யலாம். ஆனால், நீதிமன்றத்தின் கவலையானது, உடனடி நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏதாவது கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான். டிடிஏவின் மொத்த ஆண்டு பட்ஜெட் என்ன?’ என்று கேள்வி எழுப்பியது. அதற்கு அதன் துணைத் தலைவா் ரூ. 3,000 கோடி என்றாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘உங்களிடம் ரூ. 3,000 கோடி பட்ஜெட் உள்ளது. உடனடி நடவடிக்கையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.10 லட்சம் மட்டுமே தர வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டோம். ஆனால், அனைத்துவித சாக்குப்போக்குதான் கூறியிருக்கிறீா்கள்’ என்றது.