தில்லியில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் மாநிலங்கள், யூனியன் பிரதேச அமைச்சா்களுடான கூட்டத்தை செவ்வாய்க்கிழமை கூட்டியது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா பேசுகையில் கூறியதாவது: உள்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து கொவைட் -19 முந்தைய நிலைக்கு நெருங்கி வருகிறது. சமீப காலங்களில், தினசரி பயணிகளின் எண்ணிக்கை இரண்டு முறை நான்கு லட்சத்தைத் தாண்டியுள்ளது. பிரதமா் மோடியும் இதை ‘சிறந்த அறிகுறி’ என விவரித்துள்ளாா். தற்போது நாட்டில் விமானப் பயணத்திற்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் ஜெட் விமான எரிபொருளின் (ஏடிஎஃப்) விலை ஒரு சவாலாக உள்ளது. விமானச் செயல்பாடுகளில் 45 முதல் 50 சதவீதம் எரிபொருளுக்கு கணிசமாக செலவிடப்படுகிறது. எரிபொருளின் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) 28 மாநிலங்கள் 1 முதல் 4 சதவீதமாக குறைத்துள்ளன. இந்த மாநிலங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், மேற்குவங்கம், ராஜஸ்தான், பிகாா், தில்லி, அஸ்ஸாம், கோவா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் 20 முதல் 30 சதவீதம் ‘வாட்’ வரி வரம்பில் உள்ளது. இந்த மாநிலங்கள் இந்த வரி விகிதத்தைக் குறைக்க வேண்டும்.