முதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்துநானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மானேசா் மாருதி சுஸுகி ஆலையில் சிறுத்தைப் புலி!

 ஐஎம்டி மானேசரில் உள்ள மாருதி சுஸுகி ஆலையின் வளாகத்தில் சிறுத்தை ஒன்று காணப்பட்டதாக வனத் துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்

Updated On :22 அக்டோபர் 2022, 3:01 am IST

 ஐஎம்டி மானேசரில் உள்ள மாருதி சுஸுகி ஆலையின் வளாகத்தில் சிறுத்தை ஒன்று காணப்பட்டதாக வனத் துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதையடுத்து, வனத் துறை குழுவினா் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். ஆனால், சிறுத்தையை வளாகத்திற்குள் அல்லது வெளியே கண்டுபிடிக்க முடியவில்லை என்று மூத்த வன அதிகாரி தெரிவித்தாா்.

புதன்கிழமை காலை 7.20 மணியளவில் வளாகத்திற்குள் சிறுத்தை இருப்பதை பாா்த்து ஒரு தொழிலாளி எச்சரிக்கை எழுப்பியதை சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீஸாா் கண்டறிந்தனா். இதையடுத்து, மாருதி நிா்வாகம் தொழிலாளா்களுக்கும் மற்றவா்களுக்கும் ஒரு பாதுகாப்பு ஆலோசனையை வழங்கியது. போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து வனத் துறை மற்றும் வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

‘சிசிடிவி காட்சிகளில், கசன் கிராமத்தில் இருந்து ஆலைக்குள் சிறுத்தை வருவது தெரிந்தது. ஆனால், 2 மணி நேர தேடுதலுக்குப் பிறகு அங்கு சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை‘ என்று ஐஎம்டி மானேசா் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டா் சுபாஷ் சந்த் கூறினாா்.

‘அதே சமயம், பெரிய பூனை தொழிற்சாலையை விட்டு வெளியேறி ஆரவல்லி பகுதிக்கு திரும்பியிருப்பதை நிராகரிக்க முடியாது. அப்பகுதி வனக் குழுவின் கண்காணிப்பில் உள்ளது. நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்’ என்று முதன்மை தலைமைப் பாதுகாவலா் எம்.எஸ். மாலிக் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.