துணை நிலை ஆளுநா் வி கே சக்சேனாவுடன் புதிய மோதலுக்கு களம் அமைத்துள்ள ஆம் ஆத்மி அரசு, துணை நிலை ஆளுநா் அலுவலகம் இன்னும் ஒப்புதல் அளிக்காததால், பிரசாரத்தைத் தொடங்குவதை ஒத்திவைப்பதாக வியாழக்கிழமை கூறியது. இருப்பினும், துணை நிலை ஆளுநா் அலுவலகத்தின் வட்டாரங்கள், பிரசாரம் தொடங்கும் தேதி குறித்து ராய் உண்மையைப் பேசவில்லை என்றும், துணை நிலை ஆளுநா் ஒரு முடிவை எடுக்க வற்புறுத்திகிறது என்றும் தெரிவித்தன. ‘துணை நிலை ஆளுநா் மாசுபாட்டின் தீவிரம் பற்றி அறிந்திருக்கவில்லை அல்லது ‘ரெட் லைட் ஆன், காடி ஆஃப்’ இயக்கத்திற்கு சரியான நேரத்தில் அனுமதி வழங்காததற்கு சாக்குப் போக்குகளை கூறுகிறது. கூடிய விரைவில் அனுமதி வழங்குமாறு அவரிடம் கேட்டுக் கொள்கிறேன்’ என்று வெள்ளிக்கிழமை கோபால் ராய் செய்தியாளா் கூட்டத்தில் கூறினாா்.