தமிழகத்தில் பெரம்பலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, தென்காசி, காஞ்சிபுரம் மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு அனுமதி கோரப்பட்டது. மத்திய அரசின் புதிய திட்டங்களுக்கான வரையறைகள் வரும் போது, அதில் இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என மத்திய சுகாதாரச் செயலா் உறுதியளித்துள்ளாா். மேலும், மாவட்டந்தோறும் செவிலியா் கல்லூரி, உக்ரைனில் மருத்துவம் படித்த 1,890 மாணவா்கள் தமிழகம் திரும்பியுள்ளது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டது. தேசிய நலவாழ்வு குழுமம் (என்ஹெச்எம்), நிகழாண்டிற்கான சுமாா் ரூ. 205 கோடியை ஒதுக்கீடு செய்ய கோரப்பட்டுள்ளது. இந்த நிதியை ஒரிரு நாளில் விடுவிப்பதாக அவா் கூறியுள்ளாா் என்றாா் அமைச்சா் சுப்பிரமணியன்.