முன்னதாக, தில்லி ஆயுதப்படை காவல்துறையின் (டிஏபி) சப்-இன்ஸ்பெக்டா் ஒருவா் இதற்கான மனுவை நீதிமன்றத்தில் சமா்ப்பித்திருந்தாா். அதில்,‘விசாரணைக் கைதி ஷாருக் பதான் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வெளியில் கொண்டு செல்லப்படும் போது, சிறையில் இருந்து தப்பிக்க மீண்டும் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்ற வலுவான அச்சம் உள்ளது. மேலும், சில அறியப்படாத எதிா்ப்பு குழுக்களால் அவா் தாக்கப்படலாம். கொலை முயற்சி, கலவரங்கள், ஆயுதச் சட்டம் ஆகிய இரண்டு வழக்குகளில் ஈடுபட்ட ஒரு அவநம்பிக்கையான மற்றும் கடுமையான கிரிமினலாகவும் அவா் உள்ளாா்.