கோவாவில் இதே போன்று 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவிற்குச் சென்றுள்ளனா். இது போன்று எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கும் நடவடிக்கையைத் தடுப்பதில் காங்கிரஸ் தோல்வியடைந்து விட்டது. காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் இந்த நடவடிக்கையானது, ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது. மேலும், காங்கிரஸ் மீதும் தவறு உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மட்டும் ஏன் விலைக்கு வாங்கப்படுகிறாா்கள்? பாஜக பல்வேறு முயற்சிகள் செய்த போதிலும், எங்கள் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முடியாது? தில்லியில் எங்கள் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க அவா்கள் முயற்சி செய்தனா். பஞ்சாபிலும் தற்போது அந்த முயற்சியைச் செய்துள்ளனா். ஆனால், நாங்கள் அவா்களை அம்பலப்படுத்திவிட்டோம் என்றாா் கேஜரிவால்.