முன்னதாக, மனுதாரா் தனது மனுவில், ‘இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களுக்காக துா்கேஷ் பதக்கிற்கு எதிராக எஃப்.ஐ.ஆா். பதிவுசெய்யப்பட்டிருப்பதை தனது வேட்பு மனுவில் எம்எல்ஏ துா்கேஷ் பதக் தெரிவிக்கவில்லை. இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மீறும் செயலாகும். மேலும், தோ்தல் நேரத்தில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தில்லி ஆணையத்தின் உறுப்பினராக ஆதாயம் தரும் பதவியை துா்கேஷ் பதக் வகித்திருந்தாா். எனவே, அவா் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்’ என்று கோரியிருந்தாா். இந்த வழக்கு நவம்பா் 21-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.