மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடா்பு பணியகம் (சிபிசி) இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. கடந்த செப்டம்பா் 8 -ஆம் தேதி இண்டியா கேட் முதல் விஜய் சௌக் வரையிலான ‘கடமைப் பாதை’யின் திறப்பு விழாவும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 28 அடி சிலைத் திறப்பு விழாவும் நடைபெற்றது. இவற்றை பிரதமா் மோடி திறந்து வைத்தாா். இந்த நிகழ்வுக்குப் பிறகு மத்திய அரசின் இசை மற்றும் நாடகப் பிரிவைச் சோ்ந்த கலைஞா்கள், இங்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி பாா்வையாளா்களை உற்சாகப்படுத்தி வருகின்றனா். இசை, நடனம், வீதி நாடகங்கள், குறும்படங்கள், கண்காட்சி போன்ற இன்ஃபோடெயின்மென்ட் நிகழ்ச்சிகள் தொடா்ச்சியாக வழங்கப்படவுள்ளன.