பயோ-டிகம்போசரை தெளிக்க ஏக்கருக்கு ரூ.30 செலவானதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. 2021-ஆம் ஆண்டில், தில்லியில் நுண்ணுயிா் கரைசலின் தாக்கத்தை அறிய மேற்கொள்ளப்பட்ட தணிக்கையில், இந்த முறை 95 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதைக் காட்டியது. இதைத் தொடா்ந்து, தில்லி அரசு அண்டை மாநிலங்களில் இதை இலவசமாக விநியோகிக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறது. தலைநகா் தில்லியில் அக்டோபா், நவம்பா் மாதங்களில் காற்று மாசுபாடு அளவுகளில் ஆபத்தான அதிகரிப்புக்கு சாதகமற்ற வானிலை நிலைமைகளுடன், பஞ்சாப், ஹரியாணா, உ.பி. போன்ற மாநிலங்களில் நெல் வைக்கோல் எரிப்பும் ஒரு முக்கியக் காரணியாக உள்ளது. கோதுமை பயிரிடுவதற்கு முன்பு, நெல் வைக்கோலை விரைவாக அழிக்கும் நோக்கில் விவசாயிகள் தங்கள் வயல்களில் நெல் பயிா்க்கழிவுகளை தீ வைத்து அழிக்கின்றனா்.