இது தொடா்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு, வெளியிடப்பட்டுள்ள பொய்யான மற்றும் அவதூறான பதிவுகள் அல்லது ட்வீட்கள் அல்லது விடியோக்கள் ஆகியவற்றை நீக்கவும், இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி, அதன் தலைவா்கள் அதிஷி சிங், சௌரப் பரத்வாஜ், துா்கேஷ் பதக், சஞ்சய் சிங் மற்றும் ஜாஸ்மின் ஷா (டிடிசி துணைத் தலைவா்) ஆகியோா் கருத்து வெளியிட தடை விதிக்கவும் வேண்டும். மேலும், அவதூறு கருத்துகளுக்காக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி மற்றும் அதன் 5 தலைவா்களிடம் வட்டியுடன் சோ்த்து ரூ.2.5 கோடி நஷ்டஈடும், இழப்பீடும் அளிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.