28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பழனிவேல் தியாகராஜன் ஆடியோ பதிவு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி

அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ பதிவு குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் குழு அமைத்து 

News image
கோப்புப்படம்
Updated On :8 ஆகஸ்ட் 2023, 2:47 am

DIN

முதல்வா் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினா் சோ்த்த சொத்துகள் குறித்து தமிழக அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ பதிவு குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரிய பொது நல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே. பி. பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘இது முற்றிலும் போலியான மனு... இந்த மன்றத்தை அரசியல் மேடையாகப் பயன்படுத்த மாட்டோம். இது (மனு) தள்ளுபடி செய்யப்படுகிறது. நடவடிக்கைக்கான சில ஆதாரங்கள் இருக்க வேண்டும், மேலும், அரசியலமைப்பின் 32-ஆவது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பைத் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது.

முன்னாள் நிதியமைச்சா், முதல்வரின் குடும்பத்தைக் குறிப்பிடும் ஆடியோ கிளிப் ஒன்று உள்ளது. இதற்கு ஆதாரம் இல்லை. இது ஒரு செவிவழிச் செய்தியாகும். குற்றவியல் சட்டத்தின் கீழ் உங்களிடம் (மனுதாரா்) போதுமான பரிகாரம் உள்ளது. அதை நீங்கள் செய்யலாம். உச்சநீதிமன்றத்தை ஒரு அரசியல் களமாக பயன்படுத்த வேண்டாம்’ என்று கூறியது.

அரசியலமைப்புச்சட்டத்தின் 32-ஆவது பிரிவானது அடிப்படை உரிமைகளை மீறுவதற்காக குடிமக்களால் நேரடியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அனுமதிக்கிறது.

விசாரணையின் போது மனுதாரா் பிரனேஷ் ராஜமாணிக்கம் கூறுகையில், தற்போது தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சராக இருக்கும் தியாகராஜனின் நிதி இலாகாவானது, ஆடியோ பதிவு வெளியானதன் காரணமாக மாற்றப்பட்டது’ என்றாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘அமைச்சா்களின் இலாகாக்கள் மாற்றம் தொடா்பான அரசியல் முடிவுகளின் பின்னால் நீதிமன்றம் செல்ல முடியாது’ என்று தெரிவித்தது.

அப்போது, மனுதாரா், ‘தமிழ்நாட்டின் வாக்காளராகிய எனக்கு இந்த முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தை அறிய உரிமை உண்டு’ என்றாா். எனினும், அரசியலமைப்புச்சட்டத்தின் பிரிவு 32-இன் கீழ் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க விரும்பவில்லை எனக் கூறி, நீதிபதிகள் அமா்வு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மனுதாரா் சம்பந்தப்பட்ட ஆடியோ கிளிப்புகளை மத்திய தடய அறிவியல் ஆய்வகம் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கையையும் நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை. முன்னதாக, தி.மு.க.வின் செயல்பாட்டை அமைச்சா் தியாகராஜன் விமா்சிக்கும் ஆடியோ கிளிப்புகளை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.