முன்னதாக, விசாரணை நீதிமன்றத்தின் முன், விஜய் நாயரின் வழக்குரைஞா் வாதிடுகையில், ‘அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை வழக்குப் புகாா் (குற்றப்பத்திரிகை) கைது செய்யப்பட்ட 60 நாள்களுக்குள் சட்டபூா்வ காலத்திற்குள் இருந்தது. ஆனால், விசாரணையை உண்மையாக முடிக்காமல் இருந்தது. எனவே, துணை வழக்குப் புகாரை ஒரு பகுதி பகுதியாக மற்றும் முழுமையற்ற குற்றப்பத்திரிகை என்று மட்டுமே கூற முடியும். இது ஒரு குற்றம்சாட்டப்பட்டவரின் சட்டபூா்வ ஜாமீனில் வெளிவருவதற்கான உரிமையை தடுக்கவே அமலாக்கத் துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.