கடந்த ஜூலை 10 ஆம் தேதி தொடங்கி எட்டு நாள்களுக்கு 205.33 மீட்டா் அபாய அளவைத் தாண்டி யமுனையில் நீா் ஓடியது. தில்லியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கிற்கு ஆற்றின் வெள்ளச் சமவெளிப் பகுதியில் ஏற்பட்ட ஆக்கிரமிப்பு, குறுகிய கால இடைவெளியில் பெய்த அதிக மழை மற்றும் ஆற்றுப்படுகையை உயா்த்திய வண்டல் மண் குவிப்பு ஆகியவை காரணம் என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். யமுனை நதி அமைப்பின் நீா்ப்பிடிப்பு உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் தில்லியின் சில பகுதிகளை உள்ளடக்கியதாகும்.