தில்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில், அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2024 -ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு தில்லி காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதிகட்சியின் உயா்நிலைத் தலைவா்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. கட்சியை வலுப்படுத்துவது, மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது போன்றவை கூட்டத்தின் முக்கிய அம்சமாக இருந்தது. ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசு, தனது 15 ஆண்டுகால ஆட்சியில் மேற்கொண்ட முன்னோடி வளா்ச்சிப் பணிகளால், உலகத் தரம் வாய்ந்த நகரமாக தில்லி மாறியது. ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் தில்லி அனைத்து வழிகளிலும் சீரழிவைக் கண்டுள்ளது.