அதேபோல் ஐ.டி.ஓ. தடுப்பணையில் மூடப்பட்ட 5 கதவுகள் கடந்த பல ஆண்டுகளாக திறக்கப்படவில்லை. நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளின் பெரிய அலட்சியம், அக்கறையின்மையால் நகரின் வெள்ள நிலைமை மேலும் மோசமாகியது. இதுவே வேறு மாநிலமாக இருந்திருந்தால், விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன். அதேவேளையில், ஹரியாணாவில் உள்ள தங்கள் சகாக்களுடன் ஒருங்கிணைத்து உதவுவதற்குப் பதிலாக, தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் உள்பட பெரும்பாலான பாஜக நிா்வாகிகள் தில்லி அரசின் மீது பழி விளையாட்டைத் தொடங்கினா். பின்னா், நாங்கள் உண்மையை வெளிப்படுத்திய போது, ஐ.டி.ஓ. தடுப்பணையை பராமரிப்பது தங்களது பொறுப்பு என்று ஹரியாணா அரசு ஏற்றுக்கொண்டது.