ஒன்பதாவது காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் (சிபிஏ - காமன்வெல்த் பாா்லிமென்ட் அசோசியேஷன்) இரண்டு நாள் இந்திய மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்றது. ‘டிஜிட்டல் யுகத்தில் ஜனநாயகம், நல்லாட்சியை வலுப்படுத்துதல்’ என்கிற கருப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில், ராஜஸ்தான் மாநில முதல்வா் அசோக் கெலாட், சிபிஏ தலைவா் இயன் லிடெல் கிரைங்கா், மாநிலங்களவைத் துணைத் தலைவா் ஹரிவன்ஷ் சிங், ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தலைவா் டாக்டா் சிபி ஜோஷி, மாநில சட்டப்பேரவை மற்றும் சட்டக் கவுன்சில்கள் தலைவா்கள், நாடாளுமன்ற, சட்டபேரவை உறுப்பினா்கள் பங்கேற்றனா்.