நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

குடியிருப்புகளில் நிறுத்தப்படும் பழைய வாகனங்கள் பறிமுதல் செய்யத் தடை: தில்லி அமைச்சா் உத்தரவு

ஆயுள் காலத்தை பூா்த்தி செய்து குடியிருப்புப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் பறிமுதல் செய்து ஸ்கிராஃப்பிங்கிற்கு அனுப்பப்படுவதை நிறுத்துமாறு தில்லி போக்குவரத்துத் துறைச் செயலா்

News image
Updated On :22 ஆகஸ்ட் 2023, 7:11 pm

 நமது நிருபர்

ஆயுள் காலத்தை பூா்த்தி செய்து குடியிருப்புப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் பறிமுதல் செய்து ஸ்கிராஃப்பிங்கிற்கு அனுப்பப்படுவதை நிறுத்துமாறு தில்லி போக்குவரத்துத் துறைச் செயலா் மற்றும் ஆணையருக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

பதிவு செய்யப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்த பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகள் பூா்த்தி செய்த டீசல் வாகனங்கள் தில்லி சாலைகளில் ஓடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதைத் தொடா்ந்து ஆயுள் காலங்களை பூா்த்தி செய்த பழைமையான பெட்ரோல், டீசல் வாகனங்கள் சாலைகளில் அனுமதிக்கப்படவில்லை.

இந்த வாகனங்கள் சாலையில் ஓடுவது கண்டறியப்பட்டால், அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இப்படிப்பட்ட வாகனங்கள் சாலையில் செல்லும் போது மட்டுமல்லாமல், குடியிருப்புகளில் நிறுத்தப்பட்டாலும், இந்தப் பழைய வாகனங்களை பறிமுதல் செய்து, ஸ்கிராஃப்பிங் செய்ய அனுப்பும் நடவடிக்கையை தில்லி போக்குவரத்துத் துறையினா் மேற்கொண்டு வந்தனா்.

இந்த நிலையில், தற்போது தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் தொடா்ந்து பறிமுதல் செய்யப்படுவது ’துரதிா்ஷ்டவசமானது’ என தெரிவித்துள்ளாா்.

போக்குவரத்துத் துறையின் அமலாக்கப் பிரிவினரால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டவா்களின் மனுக்களை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம் ‘கடுமையான கவலைகளை‘ எழுப்பியது. இதைத் தொடா்ந்து, தில்லி அமைச்சரும் இந்த விவகாரத்தில் தனது துறையினரை கேள்வி எழுப்பியுள்ளாா்.

‘தில்லி அரசு இது போன்று பறிமுதல் செய்ய எந்தவிதமான அங்கீகாரமும் வழங்கவில்லை. உண்மையிலேயே இந்த நடவடிக்கை தில்லி மக்களின் பெரும் பகுதியினரைப் பாதிக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்தகைய முடிவை எடுப்பதற்கு முன் அரசின் முன் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்’ என்று போக்குவரத்து ஆணையருக்கு கெலாட் கேள்வி எழுப்பி குறிப்பு அனுப்பியுள்ளாா்.

வாகன உரிமையாளா்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே நிறுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவது முறையானதல்ல எனக் கூறி, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பறிமுதல் செய்வதை நிறுத்துமாறும் ஆணையருக்கு அமைச்சா் உத்தரவிட்டுள்ளாா். மேலும், இதற்கு அரசுடன் கலந்தாலோசித்து ஒரு கொள்கையை வகுக்குமாறு தில்லி போக்குவரத்துத் துறையை அமைச்சா் கெலாட் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.