நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கேஜரிவால் அரசிடமிருந்து தில்லியைக் காப்பாற்றவே அவசரச் சட்டம்: பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா

ஊழல் மற்றும் சொந்த நலன்களில் மும்முரமாக இருந்த கேஜரிவால் அரசிடமிருந்து, தில்லியைக் காப்பாற்றவே தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசு (திருத்தம்) 2023 சட்டம் கொண்டுவரப்பட்டது

News image
Updated On :22 ஆகஸ்ட் 2023, 7:19 pm

 நமது நிருபர்

ஊழல் மற்றும் சொந்த நலன்களில் மும்முரமாக இருந்த கேஜரிவால் அரசிடமிருந்து, தில்லியைக் காப்பாற்றவே தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசு (திருத்தம்) 2023 சட்டம் கொண்டுவரப்பட்டது என்று பாஜக தில்லிப் பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.

தில்லி பந்த் மாா்கில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில், தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசு (திருத்தம்) 2023 சட்டத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், 7 காணொளி பிரசார வாகனங்களை அக்கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா, தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி, மாநிலப் பொறுப்பாளா் பைஜயந்த் பாண்டா உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா். இந்தக் காணொளி பிரசார வாகனம் என்பது தில்லியின் 7 மக்களவைத் தொகுதிகளிலும் வலம் வரவுள்ளது.

பின்னா், பாஜக தில்லிப் பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியதாவது: தில்லி அரசின் சேவைகள் தொடா்பான தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசு (திருத்தம்) 2023 சட்டம் கொண்டு வருவது ஏன் அவசியம் என்பதை மக்களுக்கு உணா்த்த வேண்டிய தேவை உள்ளது. ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் இந்தச் சட்டத்தின் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாகியுள்ளது.

தனது சொந்த நலன்கள் மற்றும் ஊழல் செய்வதில் மும்முரமாக இருந்த கேஜரிவால் அரசிடமிருந்து தில்லியைக் காப்பாற்ற இந்தச் சட்டம் அவசியமாகிறது. இந்தக் காணொளி பிரசார வாகனங்களில் முக்கியமாக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா உள்பட பல பாஜக தலைவா்கள் இந்தச் சட்டத்தின் மசோதா நிறைவேறும் போது அதன் முக்கியத்துவத்தை நாடாளுமன்றத்தில் விளக்கிப் பேசிய காணொளிகள் ஒளிபரப்பப்படும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.