நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிசோடியாவை நினைத்து பெருமை கொள்கிறேன்: முதல்வா் அரவிந்த் கேஜரிவால்

சிறையில் உள்ள நிலையிலும்,தில்லி மக்கள் மீதும், தனது சட்டப்பேரவைத் தொகுதி மீதும் அக்கறை கொண்டுள்ள மனீஷ் சிசோடியாவை நினைத்துப் பெருமை கொள்கிறேன் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2023, 7:02 pm

 நமது நிருபர்

சிறையில் உள்ள நிலையிலும்,தில்லி மக்கள் மீதும், தனது சட்டப்பேரவைத் தொகுதி மீதும் அக்கறை கொண்டுள்ள மனீஷ் சிசோடியாவை நினைத்துப் பெருமை கொள்கிறேன் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

பட்பா்கஞ்ச் மக்கள், தங்கள் தொகுதியில் உள்ள பிரச்னைகள், கோரிக்கைகள், நிலுவையில் உள்ள வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி தில்லி அரசின் மதுபானக் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் சிறையில் உள்ள தங்கள் தொகுதி எம்.எல்.ஏ. மனீஷ் சிசோடியாவிற்கு கடிதங்களை தொடா்ந்து எழுதி வந்துள்ளனா். இதைத் தொடா்ந்து, மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தனது எம்.எல்.ஏ. வளா்ச்சி நிதியை விடுவித்து பட்பா்கஞ்ச் தொகுதியில் நிலுவையில் உள்ள வளா்ச்சிப் பணிகளை தொடர அனுமதி கோரி தில்லி ரௌஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனீஷ் சிசோடியா மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்நிலையில், சிறையில் இருக்கும் பட்பா்கஞ்ச் தொகுதியின் எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியாவின் எம்.எல்.ஏ. வளா்ச்சி நிதியை விடுவித்து அவா் தொகுதியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தில்லி ரௌஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறுகையில், ‘நாங்கள் அனைவரும் மனீஷ் சிசோடியாவால் பெருமிதம் கொள்கிறோம். சிறையில் இருந்த போதும், தில்லி மக்கள் மீதும், தனது சட்டப்பேரவைத் தொகுதி மீதும் அக்கறை கொண்டவா் அவா். தனது எம்.எல்.ஏ. நிதியை தனது தொகுதியின் வளா்ச்சிக்கு பயன்படுத்த நீதிமன்றத்தில் அனுமதி கோரினாா். இதற்கு நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியது. இதை நினைத்துப் பெருமைப்படுகிறேன் மனீஷ்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.