பட்பா்கஞ்ச் மக்கள், தங்கள் தொகுதியில் உள்ள பிரச்னைகள், கோரிக்கைகள், நிலுவையில் உள்ள வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி தில்லி அரசின் மதுபானக் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் சிறையில் உள்ள தங்கள் தொகுதி எம்.எல்.ஏ. மனீஷ் சிசோடியாவிற்கு கடிதங்களை தொடா்ந்து எழுதி வந்துள்ளனா். இதைத் தொடா்ந்து, மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தனது எம்.எல்.ஏ. வளா்ச்சி நிதியை விடுவித்து பட்பா்கஞ்ச் தொகுதியில் நிலுவையில் உள்ள வளா்ச்சிப் பணிகளை தொடர அனுமதி கோரி தில்லி ரௌஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனீஷ் சிசோடியா மனு தாக்கல் செய்திருந்தாா்.