மேலும், புகாா்களின் நிலையைப் பொருள்படுத்தாமல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட அனைத்து அதிகாரிகளின் விவரங்கள் தொடா்பான தரவுத் தளத்தை உருவாக்கி பராமரிக்க வேண்டும். தில்லி அரசு இந்த தரவுத் தளத்தை தில்லி மகளிா் ஆணையத்துடனும் பகிா்ந்து கொள்ள வேண்டும். அத்தோடு கடந்த கால மற்றும் நிலுவையில் உள்ள புகாா்கள் அனைத்தையும் மூத்த அதிகாரிகள் கொண்ட குழு மறு ஆய்வு செய்து, ஒவ்வொரு அதிகாரி மீதும் துறை ரீதியான மற்றும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியான நபா்களே அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை, சமூக நலம், கல்வி போன்ற முக்கியமான துறைகளில் பணியமா்த்தப்பட வேண்டும்.