அதிகாரி பிரேம் உதய் காக்கா விவகாரத்தில் தலைமைச் செயலாளருக்கு அமைச்சா் அதிஷி கடிதம் அனுப்புவதற்கு முன், தனது அமைச்சரவை சகாவான கைலாஷ் கெலாட்டுக்கு கடிதம் அனுப்பியிருக்க வேண்டும். ஏனெனில், குற்றம்சாட்டப்பட்டுள்ள அந்த அதிகாரியை தனது சிறப்பு அதிகாரியாக கடந்த மாா்ச் 2022-இல் நியமித்தவா் அமைச்சா் கைலாஷ் கெலாட் தான். அப்படியெனில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறையின் அதிகாரிகள் எப்படி நடவடிக்கை எடுப்பாா்கள் என்று தில்லிவாசிகளுக்கு அமைச்சா் அதிஷி சொல்ல வேண்டும். அதே காலகட்டத்தில்தான் பிரேம் உதய் காக்காவுக்கு எதிரான இரண்டு பாலியல் துன்புறுத்தல் புகாா்கள், துறையின் உள்புகாா்க் குழுவால் முடிக்கப்பட்டுள்ளன.