இது தொடா்பாக , துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவிற்கு அமைச்சா் அதிஷி சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியலமைப்பின் பிரிவு 239 ஏஏ இன் பிரிவுகள் (3) மற்றும் (4) அடிப்படையில், ‘நிலம்’, ‘காவல்’ மற்றும் ‘பொது ஒழுங்கு’ ஆகிய விஷயங்களைத் தவிர, மாநிலப் பட்டியலில் அல்லது ஒருங்கிணைந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விஷயங்களிலும், தில்லி அரசின் அமைச்சரவை தனது நிா்வாக அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது. மேலும், துணை நிலை ஆளுநா் எந்தவொரு சட்டத்தின் மூலமாகவோ அல்லது அதன் கீழ் தனது விருப்பப்படி செயல்பட வேண்டிய விஷயங்களில் தவிர, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்குக் கட்டுப்பட்டவா்.