தில்லி பந்த் மாா்கில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அக்கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா செய்தியாளா்களைச் சந்தித்தாா்.அப்போது அவா் கூறியதாவது: தில்லியில் ஜி-20 உச்சி மாநாட்டிற்காக மத்திய அரசு செய்து வரும் தயாரிப்புகளுக்கு கேஜரிவால் அரசு உரிமை கோர முயல்வதைப் பாா்க்கும் போது வெட்கமாக இருக்கிறது. தில்லியில் அழகுபடுத்தும் பணிகளை கவனிக்கும் நிறுவனங்களான என்.டி.எம்.சி., டி.டி.ஏ., தில்லி காவல்துறை, எம்.எச்.ஏ., எம்.இ.ஏ., ஐ.டி.பி.ஓ. உள்ளிட்ட அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன, அவற்றின் கண்காணிப்பு தில்லியின் துணை நிலை ஆளுநரால் செய்யப்படுகிறது. அழகுபடுத்தும் பணிகளை விரைவுபடுத்த, மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.