இதைத் தொடா்ந்து தில்லி மகளிா் ஆணையத்தின் தலைவா் ஸ்வாதி மாலிவால், ஆகஸ்ட் 29-ஆம் தேதி ஆணையத்தின் முன் ஆஜராகுமாறு தில்லி பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கு கடந்த ஆகஸ்ட் 26-தேதியன்று சம்மன் அனுப்பி, இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பானஅறிக்கையைக் கோரினாா். அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை தில்லி மகளிா் ஆணையத்தின் கோரிக்கையின் பேரில், பல்கலைக்கழகத்தின் மூத்த பிரதிநிதிகள் நேரில் வருகை தந்து, குறிப்பிட்டப்பட்ட அந்தச் சிறுமிக்கு அவா் விண்ணப்பித்த அதே பாடத் திட்டம் மற்றும் கல்லூரியில் சோ்க்கை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.