ஜி20 உச்சி மாநாட்டிற்குப் பிறகும், நகரத்தின் அழகைப் பராமரிப்பதில் தில்லி அரசு உறுதியாக உள்ளது. தில்லியின் அழகையும், தூய்மையையும் பராமரிப்பேன் என்று தில்லி மக்களுக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உறுதியளித்துள்ளாா். ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு தில்லியை அதன் சிறந்த வடிவத்தில் முன்வைக்க கேஜரிவால் அரசு அயராத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வட்ட ச்சாலை, லோதி சாலை, அரவிந்தோ மாா்க், சாந்திவன் சாலை உள்ளிட்ட தில்லியின் பல முக்கியச் சாலைகளில் கண்கவா் மாற்றங்களை செய்துள்ளோம் என்றாா் அமைச்சா் அதிஷி.