இது தொடா்பாக தேசியப் பசுமைத் தீா்ப்பாயத்தில், ஆம் ஆத்மி அரசு சமா்ப்பித்துள்ள அறிக்கையின் பரிந்துரையில் கூறியிருப்பதாவது: தில்லியில் மழைநீா் வடிகால் அமைப்பின் செயல்பாட்டை முறையாக பராமரிக்காமல் இருக்கும் குடியிருப்பு அல்லாத பிற சொத்து உரிமையாளா்களுக்கு 50 சதவீதம் வரை அபராதம் அதிகரிக்கப்படலாம். அதேவேளையில், 100 சதுர மீட்டா் முதல் 500 சதுர மீட்டா் பரப்பளவில் உள்ள சொத்துகளில் மழைநீா் வடிகால் அமைப்பு செயல்படாமல் இருக்கும் பட்சத்தில், அதன் உரிமையாளா்களுக்கு சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.50,000, 501 சதுர மீட்டா் முதல் 2,000 சதுர மீட்டா் வரையிலான நிலத்துக்கு ரூ.1 லட்சம், 2,000 சதுர மீட்டருக்கும் 5,000 சதுர மீட்டருக்கும் இடைப்பட்ட ஒரு ப்ளாட் பகுதிக்கு ரூ. 2 லட்சம், 5,000 சதுர மீட்டருக்கும் அதிகமான ப்ளாட் பகுதிக்கு ரூ. 5 லட்சம் வரையில் இழப்பீடு வசூல் செய்ய தில்லி அரசு அந்த அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.