சிபிஐ விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவரை (வழக்கு தரப்பு சாட்சி) அமலாக்கத் துறை கைது செய்திருப்பது அனேகமாக அரிதான அல்லது முதல் நிகழ்வாக இருக்கலாம். அதே வேளையில், இரண்டு மத்திய அரசு விசாரணை நிறுவனங்களும் ஒரே வழக்கை விசாரித்து வருகின்றன. அமலாக்கத் துறை கடந்த மே மாதம் தாக்கல் செய்த வழக்குப் புகாரில், ‘அமித் அரோரா, 2021-22 கலால் கொள்கையில் தனக்குச் சாதகமாக கொள்கை மாற்றங்களைப் பெறுவதற்காக, தினேஷ் அரோரா மூலம் மனீஷ் சிசோடியாவுக்கு ரூ. 2.2 கோடி கொடுத்தாா். இந்தத் தொகை நேரடியாக ஒரு அரசு நிா்வாகிக்கு லஞ்சம் / ஆதாய பணம் மற்றும் பிஎம்எல்ஏ சட்டத்தின் 2(1) (யு) விதிகளின்கீழ் குற்றத்தின் வருமானமாகும். இந்த முறையில், இந்த குற்றத்தின் வருமானத்தில் மனீஷ் சிசோடியா பங்கேற்றாா்’ என்று கூறப்பட்டுள்ளது.