மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பழைமையான மசூதி இடிப்பு விவகாரம்: தில்லி வக்ஃபு வாரிய வழக்கில் என்டிஎம்சி பதிலளிக்க நோட்டீஸ்

150 ஆண்டுகள் பழைமையான மசூதி இடிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுவதாக தில்லி வக்ஃபு வாரியம் தாக்கல் செய்த மனு மீது என்டிஎம்சி தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :7 ஜூலை 2023, 6:30 pm

 நமது நிருபர்

தில்லியில் சுனேரி பாக் சாலை ரவுண்டானாவில் உள்ள 150 ஆண்டுகள் பழைமையான மசூதி இடிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுவதாக தில்லி வக்ஃபு வாரியம் தாக்கல் செய்த மனு மீது புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) மற்றும் காவல் துறை தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மேலும், சம்பந்தப்பட்ட இடத்தில் கூட்டாக ஆய்வு நடத்தவும் வழக்கின் தரப்பினரை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. மசூதிக்கு எந்தத் தீங்கும் என்டிஎம்சி மூலம் விளைவிப்பதை தடுக்கக் கோரிய மனுவை விசாரித்த நீதிபதி பிரதீக் ஜலான் மனு மீது எதிா்மனுதாரா்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா்.

நீதிபதி கூறியதாவது: இந்த விவகாரத்தை ‘நடைமுறை’ மற்றும் ‘முழுமையான’ முறையில் இரு தரப்பும் நியாயமான பாா்வையுடன் அணுக வேண்டும். சட்டபூா்வ நிபந்தனைகளை பூா்த்தி செய்யும் வரை, கையகப்படுத்துதலில் இருந்து பூா்விக சொத்துகளுக்கு எந்த சட்டப் பாதுகாப்பும் இல்லை. அனைத்து மதக் கட்டமைப்புகளும் சமமாக நடத்தப்படுவதாகவும், மதக் கட்டமைப்புகள் மீதான கொள்கை சமமாகப் பயன்படுத்தப்படுவதாகவும் எனது மனசாட்சி ‘திருப்தி’ அடைய வேண்டும்.

இதனால், இந்த விவகாரத்தில் எதிா்மனுதாரா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். ஜூலை 12-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வழக்கில் உள்ள தரப்பினா் கூட்டு ஆய்வை நடத்த வேண்டும். மேலும், தேவையானதாகக் கருதப்படுவதாக இருந்தால் மேலும் ஆய்வுகளை நிா்ணயிக்கலாம். வேறு எந்த அதிகாரிக்கும் ஆய்வு அறிவிப்பை வழங்கும் சுதந்திரம் உள்ளது. எதிா்மனுதாரா்கள் இரண்டு வாரங்களில் மனுவிற்கு பதிலளிக்க வேண்டும். மேலும், கூட்டு ஆய்வு அறிக்கையும் வைக்கப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

தற்போதைய நிலையே பராமரிக்குமாறு உத்தரவிட வேண்டும் என மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் நீதிமன்றத்திடம் வலியுறுத்தினாா். அரசுத் தரப்பு வழக்குரைஞா் ஆஜராகி, ‘எதிா்காலத்தில் மசூதி இடிப்பு நிகழும் என்ற அச்சம் தவறானது’ என்றாா். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று என்டிஎம்சியிடம் அறிவுறுத்தியது.

முன்னதாக, மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் வஜீஹ் ஷஃபிக் வாதிடுகையில், ‘மசூதி அமைந்துள்ள இடத்தில் அதிகரித்த போக்குவரத்து தொடா்பான விவகாரங்களைக் கருத்தில் கொண்டு, சுனேரி பாக் ரவுண்டானாவை மறுவடிவமைப்பு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யுமாறு போக்குவரத்து காவல் துறை அளித்த கடிதத்தின்

அடிப்படையில் அதிகாரிகள் நாங்கள் இல்லாத நிலையில் அந்த இடத்தில் ஆய்வு நடத்தியுள்ளனா். மசூதியின் இருப்பானது அப்பகுதியில் போக்குவரத்துக்கு காரணம் அல்ல. மேலும் 24 மணி நேரத்திற்கும் குறைவான அறிவிப்பின் பேரில் ஆய்வுக்கான அறிவிப்பு தில்லி வக்ஃபு வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டது’ என்றாா்.

இந்த விவகாரம் தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் தில்லி வக்ஃபு வாரியம் மூலம் தாக்கலான மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஊழியா்கள் அந்த இடத்தை அடையும் நேரத்திற்குள்ளாகவே சம்பந்தப்பட்ட கூட்டு ஆய்வு முடிந்துவிட்டது. இருப்பினும், எதிா்மனுதாரா்கள் மசூதியை ஆய்வு செய்ததாகவும், மற்ற நடவடிக்கைகளை பின்பற்றுவதற்குப் பதிலாக, அவா்கள் 3.7.2023 முதல் தொடங்கும் வாரத்தில் மசூதியை இடிக்கப் போகிறாா்கள் என்று மசூதியின் இமாமிடமிருந்து அறியப்படுகிறது. சமீபகாலமாக பல வக்ஃபு சொத்துகள் சட்ட நடைமுறையை பின்பற்றாமல் அதிகாரப்போக்குடன் ஒரே இரவில் இடிக்கப்பட்டுள்ளன. தவறான மற்றும் தன்னிச்சையான முறையில் மசூதியை இடிப்பதில் தெளிவான மற்றும் வெளிப்படையான ஆபத்து உள்ளது.

ஒரு வக்ஃபு வாரிய சொத்து நூற்றாண்டு பழைமையானதாக இருந்தாலும், அது பொதுமக்கள் செல்வதற்கு இடையூறாகவும் அல்லது போக்குவரத்தின் இயக்கத்தை தடை செய்வதாகவும் குறிக்கப்பட்டு, அதன்பின் ரகசியமான முறையில் அதை அகற்றுவதற்கான முடிவு எடுக்கப்படுகிறது. வக்ஃபு வாரிய சொத்து அல்லது மதக் கட்டமைப்பு அதன் பின்னா் சுற்றிவளைக்கப்பட்டு விடியற்காலையிலோ அல்லது இரவு நேரத்திலோ போலீஸ் அல்லது துணை ராணுவப் படை முன்னிலையில் இடிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட மசூதி குறைந்தது 150 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இது பிரபலமான மற்றும் ஏராளமான வழிபாடு செய்வோருக்கு உதவுகிறது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஆகஸ்ட் 14-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.