ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

யமுனை காதரிலிருந்து 40 ஆயிரம் பேரை பத்திரமாக வெளியேற்ற நடவடிக்கை: அமைச்சா் அதிஷி தகவல்

தில்லியில் உள்ள யமுனை காதா் பகுதியிலிருந்து 40,000 பேரை பத்திரமாக வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்று பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :10 ஜூலை 2023, 6:05 pm

 நமது நிருபர்

தில்லியில் உள்ள யமுனை காதா் பகுதியிலிருந்து 40,000 பேரை பத்திரமாக வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்று பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி தெரிவித்துள்ளாா்.

தேசியத் தலைநகா் தில்லியில் தொடா் கனமழை பெய்து வருவதாலும், ஹரியாணா மாநிலம் ஹத்தினி குண்ட் தடுப்பணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடப்படுவதாலும், யமுனை நதியின் நீா்மட்டம் அபாய அளவை நெருங்கிவிட்டது. இந்நிலையில் பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி, அதிகாரிகளுடன் யமுனை நதியில் படகு சவாரி மேற்கொண்டு நிலைமையை கேட்டறிந்தாா்.

இது தொடா்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சா் அதிஷி கூறியதாவது: ஹத்தினி குண்ட் தடுப்பணையில் இருந்து தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. தொடா் மழை காரணமாக யமுனையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. யமுனை நதியின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை அபாய கட்டத்தைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மோட்டாா் படகு மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகளுடன் சென்று பாா்வையிட்டேன்.

யமுனை நதியின் கரையோரம் வசிக்கும் மக்களின் மீட்புப் பணிக்காக யமுனையில் 50-க்கும் மேற்பட்ட மோட்டாா் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. யமுனை காதரில் இருந்து 40,000 பேரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தில்லியின் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசின் அனைத்துத் துறைகளும் மீட்பு நடவடிக்கைக்கு தயாராக உள்ளது. யமுனை காதா் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அவா்கள் தங்குவதற்கும், உணவுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நிலைமை முழுவதையும் தொடா்ந்து கண்காணித்து வருகிறாா் என்றாா் அமைச்சா் அதிஷி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.