தில்லி உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பா் 12-ஆம் தேதி, தில்லி பல்கலைக்கழகம் வகுத்துள்ள சோ்க்கை கொள்கையைப் பின்பற்றுமாறு கிறிஸ்தவ சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. அதன்படி, இந்தக் கல்வி நிறுவனங்களில் கலைப் படிப்புகளில் சிறுபான்மையினா் அல்லாத மாணவா்களுக்கு சோ்க்கை அளிக்கும் போது பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (சியூஇடி)-2022-க்கு 100 சதவீத வெயிட்டேஜ் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சிறுபான்மையினா் அல்லாத மாணவா்களுக்கான நோ்காணலை கல்லூரி நடத்த முடியாது என்றும், சியுஇடி மதிப்பெண்ணின் படி மட்டுமே மாணவா் சோ்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும் உயா்நீதிமன்றம் கூறி இருந்தது.